தென்னிலங்கை வன்முறையின் பின்னணியில் கோட்டாபய : பொன்சேகா அதிர்ச்சி தகவல் (காணொளி)
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான குழுவினரே தென்னிலங்கையில் இடம்பெற்ற சில வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட அவர்,இதனைத் தெரிவித்தார்.
இந்த வன்முறையின் பின்புலத்தில் இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் இருப்பதாக பொதுவாக குற்றம் சுமத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் சில நடவடிக்கைகளுக்கு நேரடியாக உத்தரவு
தான் இராணுவத் தளபதியாக செயற்பட்ட போது கொழும்பில் சில நடவடிக்கைகளுக்கு நேரடியாக உத்தரவு வழங்கியது தாம் அல்ல, எனவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே என்றும் அது தொடர்பில் தம்மிடம் எந்த நேரத்திலும் கேள்வி கேட்கவில்லை எனவும் அவர் இந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் சம்பந்தப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்ததாக பொன்சேகா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
