பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதாகவும் அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட எடை குறைந்த மாணவர்களின் சதவீதம் 21.4 ஆகும் என்றும் அதிக எடை கொண்டவர்களின் சதவீதம் 12.1 என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் தனிமை
பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை புகைக்க முயற்சித்த அல்லது பரிசோதித்த மாணவர்களின் சதவீதம் 12.8 சதவீதமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 22.4 சதவீத மாணவர்கள் தனிமையை உணர்ந்ததாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 11.9 சதவீதமானோர் பதற்றம் காரணமாக தூங்குவதில் சிரமப்படுவதாகவும் மேலும் 18 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நெருங்கிய நண்பர்கள்
7.5 சதவீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை மற்றும் கூடுதலாக, 62.6 சதவீதமானோர் பாடசாலை நாட்களில் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் நிலை என்பன காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த கணக்கெடுப்பு 2024 இல் நடத்தப்பட்ட நிலையில், இதில் 40 அரசாங்க பள்ளிகளில் 8-12 ஆம் வகுப்புகளில் பயிலும் 3,843 மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதன்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 15 மணி நேரம் முன்
