மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அரசாங்கம்! எதிர்க்கட்சி பகிரங்க குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது எனவும் அவர் மேலும் மெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே தெரிவிக்கப்பட்டடுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து இல்லாததால் கடும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
அதே நேரத்தில் நாளாந்த ஊதியம் பெறும் குடும்பங்களும் பல இன்னல்களை சந்திப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது.
5,000 ரூபாய் கொடுப்பனவு மே மாத சம்பளம் வழங்கப்படும் வரை அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கயில் குறிப்பிடப்பட்டுள்ளது.