யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்

University of Jaffna Sri Lanka SL Protest NPP Government
By Sathangani Sep 30, 2025 09:44 AM GMT
Report

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து  அடையாள போராட்டம் ஒன்றை இன்றையதினம் (30) காலை 10.15 அளவில் முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் போது பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

கிளிநொச்சி வெடிப்பு சம்பவம்: தீவிர தேடுதலில் மீட்க்கப்பட்ட மேலும் பல வெடி குண்டுகள்

தீர்வை விரைவுபடுத்தக் கோரிக்கை 

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் பல்கலையின் ஆசிரியர் சங்க தலைவர் விக்னேஸ்வரன், “இன்றைய அரசின் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் எமது பிரச்சினைகள் குறித்து பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம் | Government University Lecturers Strike Today

தீர்வை வழங்குவதற்கு அவர்கள் இணங்கிய நிலையில், தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் அல்லது இழுத்தடிப்பு நிலை இருந்துவருவதால், அதற்கு எமது எதிர்ப்பை வெளிக்கொணரும் வகையிலும் தீர்வை விரைவுபடுத்தக் கோரியுமே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம்.

இந்த அரசு தற்போது கொண்டுவந்துள்ள சம்பள சீரமைப்பில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருக்கின்றது. அதேபோன்று கொரோனா உள்ளிட்ட பல அனர்த்தங்களால் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர் அனுமதிப்பும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை உரிய ஆராய்ச்சி முறையிலான கற்பிதங்களை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கின்றன.

வட மாகாண கல்விப் புலத்தில் குளறுபடிகள்! NPP எம்.பிக்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வட மாகாண கல்விப் புலத்தில் குளறுபடிகள்! NPP எம்.பிக்கள் தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல்

மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கு தரம் மிக்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது.

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம் | Government University Lecturers Strike Today

விரிவுரையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்களது வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை இன்றைய அரசு எடுக்காதுள்ளதால் விரிவுரையாளர்கள் கடும் சுமைகளுக்குளாகியுள்ளனர்.

அத்துடன் மாணவர்கள் கூடுதலான கற்றலை மேற்கொள்ள குறிப்பாக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது. கல்வி மறுசீரமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்றது.

இந்த நடவடிக்கையின் போது உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாது மேற்கொள்ளப்படுகின்றது என எமது தாய்ச்சங்கம் சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் அரசு அக்கறை கொள்ளாதிருக்கின்றது.

இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் அரசுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வை எட்டியிருந்தோம். ஆனால் அந்த தீர்வை நடைமுறைப்படுத்த அரசு பின்னடிக்கின்ற நிலை காணப்படுகின்றது.

கெஹல்பத்தர பத்மேவிற்கு தகவல் அளித்து துரோகமிழைத்த காவல்துறை அதிகாரி

கெஹல்பத்தர பத்மேவிற்கு தகவல் அளித்து துரோகமிழைத்த காவல்துறை அதிகாரி

வவுனியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் 

இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த ஒரு நாள் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே நாட்டின் முதுகெலும்பான பல்கலைக்கழக கட்டமைப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்“ என தெரிவித்தார்.

யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம் | Government University Lecturers Strike Today

இதேவேளை பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக ஆசிரியர் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மூளை இழப்பு, மூலதன இழப்பு, புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா, தேவையான வெற்றிடங்களை நிரப்பு, உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை போன்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி