சட்டவிரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
இன்று (13) முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது.
இதன்போது சட்டவிரோத தொழில் அதிகரிப்பு, சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அநுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்கள் எழுப்பப்பட்டது.
மனு கையளிப்பு
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுவினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளது. மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும்.
எமது மாவட்டத்தில் மீன்பிடித் துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கையினை நாம் அரசாங்கத்திற்கு அனுப்புகின்றோம். அரசாங்கத்தின் கோரிக்கைகள் கடற்றொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |






