வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் ஆளுநரின் முறைகேடு! ஜனாதிபதி - பிரதமருக்கு விசேட கடிதம்
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிட்டு வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தேவையின் சேவை கருதிய ஆசிரியர் இடமாற்றத்தில் ஆசிரியர்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஆளுநருக்கு எதிராகவும் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பை தாண்டி வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் முறைப்பாடொன்றை அனுப்பியுள்ளனர்.
இம்முறைப்பாட்டில் “நாம் 24.03.2026 அன்று சமர்ப்பித்த கடிதத்திற்கு கூடுதலாக, கீழ்க்கண்ட உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் தவறான நடத்தை
இத்தகைய நிலையில், இன்னும் 9 வேலை நாட்கள் மட்டுமே உள்ளன என்றும், அதற்குப் பிறகு 10 நாள் விடுமுறை உள்ளது எனவும் கடிதத்தில் குறிப்பிடய்யட்டுள்ளது.

எனவே, கூறப்பட்டுள்ள காலகட்டத்தில் எங்கள் மேல்முறையீடுகளை ஆராய்ந்து, அதுவரை எங்கள் இட மாறுதல்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோருவதாகவும், மேலும் இந்த வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் தவறான நடத்தையை கட்டுப்படுத்துமாறு உங்களை வேண்டுகிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |