ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நாங்கள் அப்படி கூறவே இல்லை: கைவிரித்தது அரசாங்கம்
உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்படாத ஒரு செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொது பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மற்றும் செய்திகளை வழங்கியவர்கள் மீது சட்டம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்டக் குழுவில் உள்ள எவருக்கும் குழுவில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க தார்மீக உரிமை இல்லை என்றும், ஈஸ்டர் தாக்குதல் இந்தியாவின் நலனுக்காக நடத்தப்பட்டதாகவும், அதன் மூளையாக இந்தியாவில் இருந்ததாகவும் செயலாளர் ரவி செனவிரத்ன ஒருபோதும் கூறவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகபட்ச சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் நாடாளுமன்றில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
"இந்தியாவைப் பற்றிப் பேசவே இல்லை. எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் மிகவும் தவறான மற்றும் பாரதூரமான செய்தியை உருவாக்கியுள்ளார்.
இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். எனவே, இது தொடர்பாக எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். ஏனெனில் உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்படுவதை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒருவருக்கு தார்மீக உரிமை இல்லை.அது தவறு.
இது குறித்து சரியான புரிதல் இருந்தால், அது பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஊடகங்களுக்கு வழங்குவதில் எந்த ஒழுக்கமும் இல்லை. அவை சட்டங்களுக்கு எதிரானவை." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
