அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Government Employee Harini Amarasuriya
By Sathangani Nov 04, 2024 05:07 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்த விடயங்களை பிரதமர் ஹரிணி (Harini Amarasuriya) விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ (Nimalka Fernando) தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாகம் தொடர்பில் எந்த அனுபவமும் இல்லாத பிரதமர் ஹரிணி, சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்க சொல்லவந்த விடயத்தை புரிந்துகொள்ளாமல் அவரை விமர்சித்து வருவது பிரதமரின் அகங்காரத்தையே எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் காவல் நிலையத்தில் முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி 

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து அதன் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டிருந்தது. அமைச்சரவை அனுமதித்த விடயத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரின் பொறுப்பாகும். அதுதான் அரச நிர்வாக நடைமுறையாகும்.

ஆனால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த விடயங்கள் பொய் எனவும் அமைச்சரவையின் தீர்மானத்தை மறுப்பதாகவும் தெரிவித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து வருகிறார்.

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா

சிறீதரன் விரைவில் முகவரி அற்றுப் போய் விடுவார் - எச்சரிக்கும் கே வி தவராசா

பிரதமருக்கு அரசியல் அனுபவம் இல்லை

பிரதமர் ஹரிணிக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச நிர்வாக நடைமுறைகள் தெரியாது. அவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்தவர். அவர்  படித்த ஒருவர் என நாங்கள் அவர் தொடர்பில் சந்தோசப்பட்டோம்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

இருந்த போதும், நாட்டின் சிரேஷ்ட அரசியல் தலைவர், இந்த நாட்டில் பல தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அவர் மோசமான முறையில் விமர்சித்து வருவதை காணும்போது அவர் தொடர்பில் இருந்து வந்த நல்லெண்ணம் இல்லாமல் போயிருக்கிறது. அவரது அகங்காரத்தையே இது எடுத்துக்காட்டுகிறது.

நாட்டின் அரசியல் யாப்பு தொடர்பில் அவருக்கு போதிய அறிவு இல்லாததாலே அமைச்சரவையின் தீர்மானம் குறித்து அவர் பொய் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார். அதனாலே அரசியல் யாப்பு தொடர்பில் கற்றுக்கொடுப்பதற்கு தயார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

பொதுத் தேர்தல் : மூன்றாவது நாளாக இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு

அனுபவமுள்ளவர்களிடம் கேட்டறிதல் 

பிரதமருக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கற்றுக்கொள்ள தேவையில்லை என்றால், அவர்களின் கட்சியில் அரச நிர்வாகம் தொடர்பில் கொஞ்சமேனும் அனுபவமுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஆகியோரிடமாவது கேட்டறிந்து பதிலளித்திருக்க வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : ரணிலை விமர்சித்த ஹரிணியை சாடும் நிமல்கா | Govt Employee Salary Issue Harini Criticizes Ranil

நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்து வரும் பிரதமர், இவ்வாறு மோசமான முறையில் செயற்படுவது, அவர்களின் கட்சியின் உண்மையான சுயரூபத்தையே எடுத்துக்காட்டுகிறது.

எந்த அரசியல் அனுபவம் இல்லாத பிரதமர், சிரேஷ்ட அரசியல் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அத்துடன் வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எந்த ஆலாலோசனையும் இல்லாமல் அதனை செய்ய முடியாது. அவ்வாறு சம்பள அதிகரிப்பு செய்வதாக இருந்தால் உதய செனவிரத்ன (Udaya Seneviratne) குழுவின் பரிந்துரைக்கமையவே மேற்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

கருணா - பிள்ளையான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: நால்வர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்