வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு

Sri Lanka Army Parliament of Sri Lanka Shanakiyan Rasamanickam NPP Government
By Sathangani Nov 19, 2025 03:44 AM GMT
Report

வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுவதாகவும் வழக்கமாகச் சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை நிலம் விடுவிப்பு என விளம்பரப்படுத்துகின்றது எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "பாதீட்டில் பாதுகாப்புத்துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கீடு காணப்படுகின்றது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் காணி உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

யாழில் பிரான்ஸிலிருந்து வந்த இளைஞர் வெட்டிக்கொலை

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு

யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஆனால், அதே நேரத்தில், கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் போன்ற முக்கிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

முழு நாட்டில் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நாட்டில் உள்ள முதியோர் ஆகியோரின் தேவைகளை அரசு கவனத்தில் எடுக்கவில்லை.

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு | Govt Has Not Released Lands Of North East People

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாடசாலைகளில் இன்றளவிலும் பிள்ளைகள் தற்காலிக கூடங்களில் கல்வி கற்கின்றனர். பிரதமர் ஹரிணி எதிர்க்கட்சியில் இருந்த காலத்திலும் கல்விக்குக் குறைந்தது 6 வீத நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் தற்போது இன்று அவரே ஆட்சியில் இருந்தாலும் கல்வித்துறைக்கான நிதி பாதுகாப்புத்துறையை ஒப்பிடும் வகையில் இல்லை. இது ஆட்சியின் முன்னுரிமைகளில் ஒரு முரண்பாடாகும்.

வடக்கு நிலம் விடுவிப்பு பற்றிய தவறான தகவல்களை அரசு வெளியிடுகின்றது. வடக்கு மாகாணத்தில் நிலம் விடுவிக்கப்பட்டதாக அரசு கூறுவது தவறானது. அரசு வழக்கமாக சில வீதிகளைத் திறந்து வைத்துவிட்டு, அவற்றை "நிலம் விடுவிப்பு" என விளம்பரப்படுத்துகின்றது.

அஸ்வெசும கொடுப்பனவு விவகாரம் - எடுக்கப்படும் நடவடிக்கை

அஸ்வெசும கொடுப்பனவு விவகாரம் - எடுக்கப்படும் நடவடிக்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் 

ஆனால், வீதியின் இருபுற நிலங்களும் இன்னும் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வட பகுதியில் உள்ள வயவிளான் பாடசாலை மாணவர்கள் இன்று வரை ஒரு விளையாட்டு மைதானத்தில் உள்ள தற்காலிக கூடாரத்தில் கல்வி கற்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சலூன்தான் உள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் ஒன்றை விட பல சலூன்களை இராணுவத்தினர் நடத்துகிறார்கள். இது தான் உண்மை.

வடக்கு காணி விடுவிப்பில் நாடகமாடும் அநுர அரசு : சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு | Govt Has Not Released Lands Of North East People

திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு திருகோணமலையில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் மக்களால் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட அதே கேள்வி இன்னும் தீர்க்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நில உரிமைகள் தொடர்ந்து எதிர்மறை நடவடிக்கைகளுக்கு உள்ளாகின்றன. எமது நிலத்தைப் பாதுகாக்க முடியாத நிலை இன்றளவிலும் தொடர்கின்றது.

பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைத் திருதியமைத்து, கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற மக்கள் நலத்துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்." என தெரிவித்தார்.

யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்

யாழில் கடன் சுமையால் உயிர் மாய்த்த இளைஞன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024