பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

Sri Lanka Police UNP Maaveerar Naal National People's Power - NPP
By Sumithiran Dec 02, 2024 09:30 PM GMT
Report

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் (PTA) தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இரட்டைத் நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியது.

நேற்று (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, தேசிய மக்கள் சக்தி முன்னர் நிராகரித்த சட்டத்தையே தற்போது பயன்படுத்துவதாக விமர்சித்தார்.

 அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

"ஒரு காலத்தில் தேசிய மக்கள் சக்தியால் அடக்குமுறை என்று கண்டித்த பயங்கரவாத தடைச்சட்டம் இப்போது மக்களின் குரலைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மாறியுள்ளது.இந்தச் சட்டத்தின் மீதான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Govt Over Pta Use Double Standards

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) ஊக்குவிப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை குறிவைத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அண்மையில் கைது செய்தமை குறித்து ரத்னபிரிய கவலை தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

சமூக ஊடகங்கள் மீதான அநுர அரசின் அடக்குமுறை : பொங்கியெழும் மொட்டு

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் உள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் நபர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளனர்.

நினைவேந்தல்களின் ஏற்பாட்டாளர்கள்  சுதந்திரமாக உள்ளனர்

"சில முன்னாள் எம்.பி.க்கள் உட்பட, இந்த நினைவேந்தல்களின் ஏற்பாட்டாளர்கள் விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதற்காக இறந்தவர்களைக் கௌரவிக்கும் வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திய போதிலும், இன்னும் சுதந்திரமாக உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் அநுர அரசின் இரட்டை நிலைப்பாடு : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி | Govt Over Pta Use Double Standards

மாறாக, இந்தப் பொருட்களைப் பகிர்ந்தவர்களை அரசாங்கம் குறிவைக்கிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை மிகவும் கவலையளிக்கிறது. ," என ரத்னப்ரிய கூறினார்.

எனவே, குடிமக்களை குறிவைப்பதை விடுத்து, விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதற்காக நினைவேந்தல்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் தீர்க்கமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தால், இதுபோன்ற தவறான பயன்பாட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதாரண மக்கள் அல்ல,” என்று அவர் மேலும்தெரிவித்தார்.

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மாவீரர் தின நினைவேந்தல்: கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026