அநுர அரசு இழைத்த மிகப்பெரிய தவறு: வருத்தத்தில் ரணில்
மன்னாரில் அதானி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லத் தவறியதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த தனிப்பிட்ட நேர்காணல் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்திய முதலீட்டாளர்கள் உட்பட தொடர்புடைய பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கமும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஒரு திட்டத்திற்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திசைக்காட்டி பேச்சுவார்த்தை நடத்த என்ன தேவை உள்ளது என்றும் ரணில் கேள்வியெழுப்பியுள்ளார்.
முதலீட்டு திட்டங்களுக்கு தடை
இதேவேளை, இந்த நிலைமையானது, எதிர்காலத்தில் பெரிய அளவிலான முதலீட்டு திட்டங்களுக்கு தடையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தனது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் தற்போதைய அரசாங்கத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடலை மையமாகக் கொண்டு ஆசியாவை நோக்கிய உலகளாவிய சக்தி மாற்றம் நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அதிலிருந்து பயனடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
2 வாரங்கள் முன்