நெல் விவசாயிகளுக்கு சலுகை! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல்லின் கொள்முதல் விலையை அதிகரிப்பதை விட, நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த இன்று(24) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு வழங்கும் விலையை அதிகரித்தால், ஆலை உரிமையாளர்கள் அரிசியின் சில்லறை விலையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு சலுகை
இந்த நிலையில், அரசாங்கம் நுகர்வோரைப் பாதுகாக்க வேண்டியுள்ளதால், நெல் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, நெல்லின் கொள்முதல் விலையை அதிகரிப்பது சாத்தியமான ஒன்றாக இருக்காது என்பதையும் அமைச்சர் லால் காந்த கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |