மதுபானசாலைகளை திறக்க உத்தரவிட்டது யார்? வெளியானது தகவல்
srilanka
reopen
liquar stores
By Jaso
நிதி அமைச்சிலிருந்து கலால் வரித் திணைக்களத்திற்கு உத்தியோகப்பூர்வமற்ற முறையில், வழங்கப்பட்ட உத்தரவை அடுத்தே, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கலால் வரித் திணைக்களத்தில் அனுமதி பெறப்பட்ட மதுபானசாலைகள் மற்றும் பியர் மற்றும் வைன் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனையில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு நிதி அமைச்சின் உயர் அதிகாரியொருவரினால், தொலைபேசி ஊடாக கலால் வரித் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
எனினும், நிதி அமைச்சிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்