பேரனின் கொடூர தாக்குதலில் தாத்தா, பாட்டி பரிதாப மரணம்
பேரனின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகிய 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியும் பரிதாகரமாக உயிரிழந்துள்ளனர்.
பல்லகெடுவ காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்வதற்கான நடவடிக்கை
இந்த சம்பவத்தின் சந்தேகநபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாகவும் அவரை
கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பல்லகெடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
