தலதா மாளிகை - அஸ்கிரிய பீடத்தில் இருந்து மக்களுக்கு மிகப்பெரிய உதவித்தொகை
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சமூக நல நிதியம் என்ற கணக்கைத் திறக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் மல்வத்த அஸ்கிரி உபய மகா விகாரை இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார கூறியுள்ளார்.
கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
“இந்தக் கணக்கு மக்கள் வங்கியின் கண்டி கிளையில் திறக்கப்பட்டது.
கண்டி மக்கள் வங்கி கிளை
பங்களிக்கக்கூடியவர்கள் கண்டி மக்கள் வங்கி கிளையின் 003 - 2001-0010 2599 என்ற கணக்கு எண்ணுக்கு பணத்தை வரவு வைப்பதன் மூலம் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம் என்றும், வெளிநாட்டில் இருப்பவர்கள் SWIFT குறியீடு - PSBKLKIX மூலமாகவும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்கலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

"மல்வத்து அஸ்கிரி உபய மகாவிகாரமும், தலதா மாளிகையும் இணைந்து சமூக நல நிதிக்கு இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து ஒரு கணக்கைத் திறந்துள்ளன.
இந்தப் பேரிடரை எதிர்கொண்ட மக்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால உதவிகளை வழங்குவதற்காக, வீடுகளை இழந்தவர்களுக்கு சில திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, மக்கள் வங்கியின் கண்டி கிளையில் சமூக நல நிதியம் என்ற பெயரில் ஒரு கணக்கு திறக்கப்பட்டது.
சர்வதேச பரிவர்த்தனை
சர்வதேச பரிவர்த்தனைகளுக்காக 003 - 2001-0010 2599 என்ற கணக்கு எண்ணையும், SWIFT குறியீட்டை - PSBKLKIX ஐயும் பயன்படுத்தி இந்த நிதியைத் தொடங்கியுள்ளோம்."

"இந்த நிதியை வெளிப்படைத்தன்மையுடன் நாங்கள் நிறுவியுள்ளோம்.
இந்த நிதியை ஒரு சர்வதேச தணிக்கை நிறுவனம் தணிக்கை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இங்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். முழு தீவுக்கும் ஏற்ற வகையில் இந்த சமூக சேவையை மேற்கொள்ள நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |