இராணுவத்தை சிறையில் அடைத்தே ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பெற்றது நல்லாட்சி - அரசாங்கம் தெரிவிப்பு

army ajith nivad capral gsp+
By Jaso Jul 02, 2021 04:54 PM GMT
Report

ஸ்ரீலங்கா இராணுவத்தை சிறையில் அடைத்து, சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ததன் மூலமே கடந்த காலத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஸ்ரீலங்காவால் பெற்றுக்கொள்ள முடிந்ததாக, இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு உடன்படுவதாக அப்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்ததாகவும், இது பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்லவெனவும் மாறாக இது அரசியல் சார்ந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி ஊடான கலந்துரையாடலில் பங்கேற்ற அஜித் நிவாட் கப்பராலிடம், ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும்போது அதற்காகப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவை பொருளாதாரம் சார்ந்த நிபந்தனைகள் அல்ல. மாறாக நாடொன்றின் கொள்கைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் சார்ந்த நிபந்தனைகளாகவே இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கடந்த 2002ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது, போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டு 2010ஆம் ஆண்டில் இல்லாமல் செய்யப்பட்டது. அப்போதும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போகின்றது என்பது உள்ளடங்கலாக இப்போது முன்வைக்கப்படும் அனைத்துக் கூச்சல்களும் எழுந்தன.

ஆனால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த ஏற்றுமதிகளை விடவும் 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் அளவு 20 சதவீதத்தினால் அதிகரித்தது. இவர்கள் கூறுவதைப்போன்று பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் மீண்டும் கடந்த 2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு உடன்படுவதாகக் கூறினார்கள்.

எமது இராணுவ வீரர்களை சிறைகளில் அடைத்தார்கள். சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்தார்கள். அதன்மூலமே அந்த வரிச்சலுகை மீண்டும் பெறப்பட்டது. இவையனைத்தும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்ல. மாறாக அரசியல் நடவடிக்கைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே எமது கொள்கைகள் மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பில் நாம் அவர்களுக்கு விளக்கமளிக்க முடியும். இல்லாவிட்டால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவேண்டும்.

அடுத்தவாரமளவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, உரிய செயற்திட்டங்கள் வகுக்கப்படும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்கான கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்படும்”

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020