இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனம்
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் ஏர் (Gulf Air), கொழும்புக்கான தனது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதோடு, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய பயண அட்டவணையையும் அறிவித்துள்ளது.
இது இலங்கையின் சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மேம்படுத்தப்பட்ட சேவையின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (CMB) பஹ்ரைன் ஊடாக உலகின் 41 இடங்களுக்கு தினசரி விமான இணைப்புகளை கல்ஃப் ஏர் வழங்கவுள்ளது.
பயணிகளுக்கு பெரும் வசதி
பயணிகள் பஹ்ரைன் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, இலகுவான முறையில் மற்ற நாடுகளுக்குப் பயணிக்க ஏதுவாக இந்த புதிய அட்டவணை மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் வசதியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
குறிப்பாக, கொழும்பு நகரம் பிராந்திய ரீதியாக ஒரு முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதை இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.
இலங்கைச் சந்தை
இலங்கைச் சந்தை மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள கல்ஃப் ஏர், பஹ்ரைன் மையப்பகுதி ஊடாக விரிவான வலையமைப்பை பயணிகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Image Credit: Reuters
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர், கல்ஃப் ஏர் நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தை (+94) 117 441 431 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது gulfaircmb@keells.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |