விடுதலை செய்யப்படும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்
விடுதலை செய்யப்படும் மூன்று பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் (Hamas) வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) மற்றும் காசாவின் (Gaza) ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250 இற்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.
தற்காலிக போர்
அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120 இற்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ள நிலையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆறு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் மூன்று பேரை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.
இஸ்ரேலிய பிணைக்கைதிகள்
பிணைக்கைதிகளில் மூன்று ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29) மற்றும் சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய மூன்று பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
அதற்கு ஈடாக தற்போதுவரை 750 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)