நாலந்தவில் ஏ9 வீதிக்கு அருகில் கைக்குண்டு மீட்பு
கண்டி (Kandy) - யாழ்ப்பாணம் (Jaffna) வீதியின், நாலந்த பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
A - 9 வீதிக்கு 500 மீற்றர் அளவு தூரத்தில் அமைந்துள்ள நீரேந்து பிரதேசமொன்றிற்கு அருகிலிருந்து இன்று (05) இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறைக்குக் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் குறிப்பிடப்படுகிறது.
காவல்துறையினர் சந்தேகம்
இந்தநிலையில் கைக்குண்டு பொலித்தீன் உறையில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏதேனும் ஒரு குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவிற்காக குறித்த கைக்குண்டு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஊடாக செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
