ரணில் - சஜித் கூட்டணி: ஹரின் விடுத்துள்ள எச்சரிக்கை
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையேல் எமது ஆதரவாளர்கள் வேறு அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று அரசியல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும்.

அதற்குரிய இடைவெளியை வழங்கினால் எமது ஆதரவாளர்கள் மாற்று அரசியல் முகாமை நோக்கி நகரக்கூடும்.
எனவே, அடுத்த கூட்டத்திலாவது இரு தரப்புகளும் இணைய வேண்டும் அவ்வாறு இணைவார்கள் என நம்புகின்றோம்.
ஆதரவாளர்கள்
நுகேகொடைக் கூட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தை நடத்துவதற்கு அந்தக் கட்சியே முன்னின்றது, அதனால்தான் நாமல் ராஜபக்சவை இளவரசர் என விளித்தேன்.
இந்த விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை, இந்த நாட்டில் இனி இளவரசர்கள் தெரிவாகப்போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |