உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் இலங்கையிலும் பரவியதா? வெளிவந்த அச்சம் கலந்த தகவல்
தற்போது உலகை அச்சுறுத்தும் புதியவகை வைரஸ் தொற்றான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் யாராவது இலங்கைக்குள் வரவில்லை என உறுதியாக தெரிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான தென்னாபிரிக்க பிரஜைகள், இலங்கைக்கு வரவில்லை என்ற காரணத்தினால், ஏனைய நாடுகளை விட இலங்கையில் இந்நோய் பரவுவது குறைவாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரபணு பகுப்பாய்வு மூலம் இந்த இனம் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது பரவும் வரை அதைக் கண்டறிய முடியாது என்றும் ஒமிக்ரோன் மாறுபாடு பரவுகிறதா? இல்லையா என்பதை சுற்றி இருந்து பார்ப்பதை விட, கொரோனாவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதைப் பார்க்கும்போது, இலங்கைக்கு வரவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.
தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவிலான மக்கள் நேரடியாக இலங்கைக்கு வருவதில்லை.
சில நேரங்களில் இந்த வகை பரவும் வரை நாம் கேள்விப்பட்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.