அரச தலைவரின் எதிர்பார்ப்பை வெளியிட்டார் வியாழேந்திரன்
விலைவாசி உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாத விடயம், உண்மையில் இந்தக் கொரோனா சூழல் தான் எங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் ச. வியாழேந்திரன் (S.Viyalendran) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச தலைவர் மற்றும் பிரதமர் உட்பட இந்த விலைவாசியை கட்டுப்படுத்த கூடுதலான கவனத்தை செலுத்துமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளனர்.
விலைவாசியை முடிந்தளவு கட்டுப்படுத்த வேண்டும், முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அரச தலைவர் குறியாக இருக்கின்றார் என்பது யாவருக்கும் தெரிந்த விடயம்.
ஆகவே நான் நினைக்கின்றேன், இப்பொழுது கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இருந்து படிப்படியக மீண்டெழுந்து வந்து கொண்டு இருக்கின்றோம். சாதகமான சூழல் எமக்கு தென்படுகின்றது. தடுப்பூசிகள் தற்போது 75% தாண்டிச் செல்கின்றது. பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. சுமூகமான நிலை வர இருக்கின்றது.
நிச்சயமாக மக்களுக்குரிய அத்தியாவசிய தேவைகளுக்காக இருக்கின்ற விடயங்களுக்கான விலை வாசிகள் நிச்சயமாக குறைக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அரச தலைவர் உட்பட அரசாங்கமும் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.