அதிக வேகத்தால் கோர விபத்து - மாணவர்கள் படுகாயம்
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து மட்டக்களப்பு – கல்முனை பழைய வீதியின் நாவற்குடா ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது
நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கட்டிடமொன்றின் சுவரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்த மாணவர்கள் இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |