அரைகுறை வீடுகளை பூர்த்தி செய்க - அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பிரதமர் மஹிந்த
mahinda
people
money
house
By Vanan
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதியுதவிகளை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (18) நாடாளுமன்ற குழு அறை 02 இல் இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் நிலையான கட்டளை 112 இன் விதிகளின்படி குழுவிற்கு அறிவிக்கப்படும் விடயங்கள் குறித்து விவாதிக்கும் போதே பிரதமர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்