காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Sri Lanka Army Sri Lanka Police Go Home Gota Sri Lankan protests Sri Lankan Peoples
By Kiruththikan May 10, 2022 05:51 AM GMT
Report

திங்கட்கிழமை (9) இடம்பெற்ற சம்பவங்களுக்கு விதியை பேணத் தவறியது ஏன் என்பதை விளக்குவதற்காக காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மே 12 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகில் உள்ள மைன கோ கம போராட்டத் தளத்தின் மீது அரச சார்பு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திங்கட்கிழமை காலை சாதாரணமாக குழப்பமான காட்சியாக மாறியது. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு | Hr Commission Summons Igp And Army Commander

காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு | Hr Commission Summons Igp And Army Commander

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பு ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனா கோ கம போராட்டத் தளத்தைத் தாக்கி, முகாமைக் கலைத்தனர்.

அதன் பின்னர், அவர்கள் கோட்டா கோ கம எனப்படும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திற்குச் சென்று பல கூடாரங்களை அழித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களையும் தாக்கினர்.

காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு | Hr Commission Summons Igp And Army Commander

காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு | Hr Commission Summons Igp And Army Commander

நிலைமையைக் கட்டுப்படுத்த இலங்கை காவல்துறை , கலகத் தடுப்புப் காவல்துறை, இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய சட்ட அமலாக்க முகவர் நிலையங்கள் வரவழைக்கப்பட்டதோடு, அமைதியின்மையைக் கட்டுப்படுத்த இலங்கை காவல்துறையினர் இறுதியில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, இலங்கை அரச தலைவர் அவசரகால நிலையை அறிவித்தார்.

ஒரு மாத காலப்பகுதியில் இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.

இந் நிலையில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் இடம் பெற்ற விதி மீறல்கள் பற்றி விளக்குவதற்காக காவல்துறை மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி