நாட்டிற்கு வரவுள்ள பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள்: இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை

SriLankan Airlines Arundika Fernando Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani May 23, 2024 03:27 AM GMT
Report

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நிலையில், வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ (Arundika Fernando) தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களைக் கண்டறிந்து அவற்றை ஒழுங்கான முறையில் பராமரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

அதிபர் ரணில் ஆலோசனை

இதன்படி, ஹில்டன் ஹோட்டல் போன்ற நிறுவனங்களுக்கு அந்த முதலீடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பெற்று, அதன் மூலம் அரசாங்க திறைசேரியைப் பலப்படுத்தவும், ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கவும், நிறுவனத்தை ஒழுங்கான முறையில் பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதுடன்  இந்த முதலீடுகளுக்கு அரசின் மதிப்பீட்டை விட அதிக பெறுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டிற்கு வரவுள்ள பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள்: இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை | Huge Amount Of Foreign Investment Coming Into Sl

அரச நிறுவனங்களுக்கு மதிப்பீட்டுப் பெறுமதிக்கு கீழ் தனியார் முதலீடுகளை வழங்க வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறைவான விலையில் அரச நிறுவனத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.

மேலும், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரியளவு கடனைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், விமான நிறுவனத்திற்கு வரும் முதலீட்டாளர் மீதி கடனைத் தாங்கும் அளவுக்கு வலிமையுடன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி கொழும்பு ஹயட் ஹோட்டல், கிறிஷ் மற்றும் டெஸ்டினி திட்டங்களுக்கு பெறுமதியான அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த முதலீட்டாளர்கள் அந்த திட்டங்களை கைவிட்டுவிட்டனர். கிறிஷ் திட்டத்தில் பாழடைந்த கட்டிடத்துடன் சுற்றுச்சூழல் பிரச்சினை மாத்திரமே எஞ்சியுள்ளது.

மீண்டும் மின்சார கட்டணக் குறைப்பு...! எரிசக்தி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

மீண்டும் மின்சார கட்டணக் குறைப்பு...! எரிசக்தி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

 முப்படைகளின் பங்களிப்பு

அத்துடன் கொழும்பு ஹயட் ஹோட்டல் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அது இந்நாட்டு மக்களின் பணம் என்பதைக் கூற வேண்டும். இந்த ஹயட் ஹோட்டல் திட்டத்துடன் தொடர்புடைய மேலும் 35 மில்லியன் டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பு நகரில் உள்ள மிகவும் பெறுமதியான காணி இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வரவுள்ள பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள்: இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை | Huge Amount Of Foreign Investment Coming Into Sl

இத்திட்டத்தை தொடர பொருத்தமான முதலீட்டாளர் கிடைக்காவிட்டால், அரச திறைசேரியில் இருந்து செலவழித்து முப்படைகளின் பங்களிப்புடன் நிர்மாணப் பணிகளை முடிக்க எண்ணியுள்ளோம்.

மேலும் அடுத்த சில மாதங்களில் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் இந்நாட்டிற்கு வரும் என நம்புகிறோம். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டுள்ள நிலையில், இந்நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன், நிறுத்தப்பட்டிருந்த பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் போக்குவரத்து தடை...! மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

பிரதான வீதியில் போக்குவரத்து தடை...! மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டம்

அதிபர் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஏற்பட்ட பொருளாதார வலுவூட்டல் காரணமாக அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்திற்கு சமுர்த்தியை விட மூன்று மடங்கு தொகையை ஒதுக்கீடு செய்ய முடிந்துள்ளது.

நாட்டிற்கு வரவுள்ள பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள்: இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை | Huge Amount Of Foreign Investment Coming Into Sl

அத்துடன் உரிமம் பெற்ற காணிகளுக்கு முழுமையான காணி உறுதிகளை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல பணிகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாம் நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..... 


ReeCha
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017