பாலச்சந்திரன் மரணத்தின் நிபுணர்கள் அறிக்கை - வெளிவரும் உண்மைகள்...
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கைதுசெய்யப்பட்டு மிக அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை சர்வதேச தர சுடு கள நிபுணர்கள் காயத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து உறுதிசெய்திருப்பதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 'பாலகன் பாலச்சந்திரனின் மரண விசாரணை தொடர்பில் பகுப்பாய்வு செய்தவர்கள் சுடு கள நிபுணர்கள் ஆவர்.
பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான புகைப்படம் மற்றும் படுகொலை சம்பவத்தை உறுதி படுத்துவதற்காகவே இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது” எனக் கூறியிருக்கிறார்.
தமிழர் பகுதிகளில் அண்மைய நாட்களில் புதைகுழி விவகாரம் மிகவும் ஒரு பிரதான பேசுபொருளாகவும் அரசியல் ரீதியாகவும் பார்க்கக்கூடிய விடயமாக இருக்கிறது.
கிடைக்கப்பெற்ற எச்சங்களை பகுப்பாய்வு செய்வதில் இன்று வரை அசட்டைத்தனமான பதிலையே சிறிலங்கா அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த விடயம் தொடர்பாக சர்வதேச ரீதியில் எவ்வாறு பார்க்க முடியும் என்பதற்கு பதில் வழங்கிய அவர், “சிறிலங்கா அரசாங்கத்தை பொறுத்தவரை அவர்கள் தாம் தப்பி பிழைப்பதற்கான வழிகளை தான் தேடி விடுவார்கள்.
இந்த விவகாரத்தில் தமிழர் தரப்பு என்ன கூறுகிறார்கள் என்றால், இந்த அகழ்வானது அனைத்துலக தரத்திற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் - எடுக்கப்படும் எச்சங்கள் முறையாக பேணப்பட வேண்டும்” என்பதே - என்றார்.