பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர் பாவனை : சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை!

European Union Sri Lankan Tamils Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Eunice Ruth Dec 07, 2023 03:47 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டம் தடை செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற 9 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம்

இலங்கையில் சிறுபான்மையினர் மற்றும் குடிசார் சமூக ஆர்வலர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு குறித்த சட்டம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர் பாவனை : சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை! | Human Rights Watch Condemns Pta Sl Government

சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டம் தொடர்பில் இத்தாலியின் நிலைப்பாடு

சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டம் தொடர்பில் இத்தாலியின் நிலைப்பாடு

பயங்கரவாத தடைச் சட்டம் மாற்றியமைக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்ததிருந்தாலும், அந்த உறுதி மொழியை தொடர்ந்தும் மீறி வருவதாக அந்த அமைப்பு சாடியுள்ளது.

உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது கொடூரமான துஷ்பிரயோகம் எனவும், தொடர்ச்சியாக ஒரு சமூகம் ஒடுக்கப்படுவதற்கான எடுத்துக்காட்டு எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினத்தவர்களை குறிவைக்கும் அரசாங்கம் 

சிறுபான்மையினத்தவர்களின் இறந்தவர்களை நினைவு கூரும் செயற்பாடுகளை அரசாங்கம் தடுப்பது மதம், நம்பிக்கை கருத்து சுதந்திரம் ஆகியவற்றை மீறும் செயற்பாடு என அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் தொடர் பாவனை : சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை! | Human Rights Watch Condemns Pta Sl Government

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர்(படங்கள்)

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர்(படங்கள்)

நல்லிணக்கம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் கருத்து வெளியிட்டாலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை மேலும் ஆழப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் சர்வதேச பங்காளர்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை விமர்சித்துள்ளன.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான விமர்சனங்களை ஒடுக்குவதற்கும், அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை

இருதரப்பு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017