காவல்துறை சீருடையை தாண்டிய மனிதாபிமானம்(photo)
சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாடசாலை மாணவனுக்கு உணவளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு நவகமுவ காவல்துறை பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் லக்ஷ்மன் டி சில்வா உணவளித்துள்ளார்.
இன்று காலை கடுவலை முனிதாச குமாரதுங்க வித்தியாலயத்திற்கு முன்பாக குறித்த மாணவன் பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளான் இதன்போது நவகமுவ காவல்துறை பொறுப்பதிகாரி பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தார்.
விபத்தை நேரில் பார்த்த அவர், மாணவனை ஜீப்பில் ஏற்றி நவகமுவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். மாணவனுக்கு சிகிச்சை அளித்த பின்னர், மாணவன் பசியுடன் இருந்ததையும், உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்ததையும் காவல்துறை பொறுப்பதிகாரி புகைப்படம் ஊடாக வெளியிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளின் மனிமாபிமானம் சீருடைக்குள் மறைந்திருந்தாலும், இதயத்தின் கருணையை விளக்கும் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

