வாக்குவாதம் முற்றியதில் மனைவியை கொன்ற கணவன் - இருவர் கைது
Badulla
Sri Lanka Police Investigation
By Beulah
ஐம்பது வயதுடைய பெண்ணொருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், 70 வயதான பெண்ணின் கணவர் மற்றும் 26 வயதான மூத்த மகன் என்போரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ளதாக சந்தேகநபர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கணவன் மனைவியை தாக்கி விட்டு சடலத்தை தன் மூத்த மகனின் உதவியுடன் தோட்டத்தில் புதைத்துள்ளதாகவும்
காவல்துறையினரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி