கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்! இலங்கை கிரிக்கட்டுக்கு ஐ.சி.சி எச்சரிக்கை
இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்தல்களை ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் தேர்தலை நடத்த தவறினால் இலங்கை கிரிக்கட் சபை மீண்டும் ICC-இன் கறுப்பு பட்டியலில் உள்வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நாட்டுக்கு வருகைத்தந்திருந்த ICC தலைவர், ர் ஜெய் ஷாவிற்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசியல் மயமாக்கும் செயற்பாடு
இதன்போதே மேற்கண்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் இலங்கை கிரிக்கட்டை அரசியல் மயமாக்குவது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை கிரிக்கெட்டுக்குள் 2023ஆம் ஆண்டளவில் அரசியல் தலையீடு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் உறுப்புரிமையை இடைநீக்கும் நடவடிக்கையில் ஐ.சி.சி ஈடுபட்டது.
இவ்வாறான நிலையில் கிரிக்கெட் சபை நிர்வாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், இலங்கை இது போன்ற தடையை மீண்டும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரன் விக்ரமரத்ன
இந்த கோரிக்கை குறித்து ஜெய் ஷா, இலங்கை கிரிக்கெட்டின் பங்குதாரர்கள், மற்றுத் நிர்வாக குழுவிடமும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்னவின் தலைமையில் இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழுவின் மீதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா உட்பட இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு பதவி விலகியதை தொடர்ந்து, விளையாட்டு அமைச்சு அதன் நிர்வாகத்தை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டதுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் இந்த புதிய இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |