பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைப்பு
A D Susil Premajayantha
Roshan Ranasinghe
Sri Lankan Schools
By Beulah
பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பிலான யோசனையொன்றினை முன்வைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாணவர்களை ஊக்குவித்தல்

அவ்வகையில், பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க சமர்ப்பித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
YOU MAY LIKE THIS