விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு : 4500 மில்லியன் ரூபா வங்கிகளில் வைப்பு
பயிர்கள் மஞ்சள் நிறமாவதை தடுக்க பூந்தி உரம் இட வேண்டும் என வேளாண் துறையினர் விவசாயிகளை கேட்டுக் கொள்கின்றனர்.
இந்த நாட்களில் சில பிரதேசங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
சரியான ஊட்டச்சத்து இல்லாததால்
தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஒரு நோயல்ல, மாறாக தண்டுகளுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு என்று படலகொட வீ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறுகிறது.
பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடிக்கு யூரியா உரத்தை (Murate of Potash MOP) பயன்படுத்தினாலும், பூந்தி உரம் இடுவதற்கு நடவடிக்கை எடுக்காததால் தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாக நெல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
4500 மில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்கில்
ஒவ்வொரு ஹெக்டேர் நெற்செய்கைக்கும் அரசாங்கம் 15,000 ரூபாவை மானியமாக வழங்குவதுடன் இதுவரை விவசாய அபிவிருத்தி திணைக்களம் கிட்டத்தட்ட 4500 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 7 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)