தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் பொதுக்கூட்டம் நடைபெற்று நிர்வாகத் தெரிவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் தலைமையில் இன்றைய தினம் (30) கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேசக் கிளைகளினதும் நிர்வாகிகள், மாவட்ட மாதர் முன்னணி மற்றும் வாலிபர் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிர்வாக குழு
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், செயலாளராக வீரவாகு விஜயகுமாரும், பொருளாளராக அன்பழகி செல்வரட்ணம், மற்றும் துணைத்தலைவராக வடக்கு மாகாண சபையின் மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, துணைச் செயலாளராக கரைச்சிப் பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்கள்
அதேவேளை மாவட்டக் கிளையின் செயற்குழு உறுப்பினர்களாக தகலைவாணி சிறீகாந்தன், குணலக்சுமி குலவீரசிங்கம், சிவயோகலட்சுமி சந்திரபோஸ், சுபிதா வேலாயுதபிள்ளை, உதயராணி சத்தியசீலன், மற்றும் பரமலிங்கம் பாஸ்கரன், ஸ்ரீரஞ்சன், கறுப்பையா ஜெயக்குமார், சின்னையா தவபாலன், சுப்பிரமணியம் சுரேன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இத் தெரிவுக் கூட்டத்தை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b545df7f-84ad-4eda-b6c0-e34e5112e61c/23-64ef452ae6ade.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/25e876c8-fab5-42d9-85fd-aa177274647a/23-64ef452b4e45c.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)