மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம்

Fishing Sri Lankan Peoples Money Dollars
By Kathirpriya Feb 22, 2024 06:39 AM GMT
Report

சீஷெல்ஸ் நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கைப் பிரஜை ஒருவருக்கு 41,000 டொலர்கள் (550,000 சீஷெல்ஸ் ரூபாய்) அபராதம் விதித்து சீஷெல்ஸ் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த இலங்கைப் பிரஜைக்கு நேற்றைய தினம் (21) நீதிமன்றத்தில் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சீஷெல்ஸ் நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் 05 கடற்றொழிலாளர்கள் கைது! வெளியான காரணம்

மன்னாரில் 05 கடற்றொழிலாளர்கள் கைது! வெளியான காரணம்

குறைந்தபட்ச தண்டனை 

இடைமறித்து பிடிக்கப்பட்ட, ரன்குருல்லா 4 என்ற கப்பலுக்குப் பொறுப்பான 43 வயதான மகவிட்ட லியனகே திலேஷ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம் | Illegal Fishing In Seychelles Sri Lankan Arrested

கைது செய்யப்பட்டவர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதனாலும் அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுள்ள குடும்பத்தின் தலைவர் என்பது மாத்திரமல்லாமல் அவரது வருமானத்தை நம்பி அவரது குடும்பம் இருக்கின்ற காரணத்தால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வழக்கின் தலைமை நீதிபதி தீர்மானித்துள்ளார்.

மேலும், தாம் பிடித்த மீன்கள் சீஷெல்ஸ் மீன்பிடி அதிகார சபையினால் சேகரிக்கப்பட்டு 35,320 சீஷெல்ஸ் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் இலங்கைப் பிரஜை நீதிமன்றில் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் கைது!

18 மாதங்கள் சிறைத்தண்டனை

இந்நிலையில் 41,000 டொலர்கள் (550,000 சீஷெல்ஸ் ரூபாய்) அபராதத்தினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் குற்றவாளி 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கைப் பிரஜை : விதிக்கப்பட்டது அபராதம் | Illegal Fishing In Seychelles Sri Lankan Arrested

இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்திலும் 18 வெளிநாட்டு கப்பல்கள் சீஷெல்ஸின் பொருளாதார வலயத்தில் இடைமறித்து கைது செய்யப்பட்டன, அதில் எட்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற இலங்கையிலிருந்து வந்த ஒரு கப்பலும் இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமான சீஷெல்ஸ், 1.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது, இந்தத் தீவு நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026