சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு குற்றசாட்டில் 25 பேர் கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Arrest
By Pavi
ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் கடத்தல் நடவடிக்கையை வலான காவல்துறை பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டில் மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 படகுகள் மற்றும் ஐந்து மோட்டார்கள் உட்பட, ரூ. 70 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இரத்தினக்கல் அகழ்வு உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு
மேலும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி