ஓய்வூதியம் பெறவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க ஓய்வூதியத் திணைக்களத்தினால் விசேட இணையவழி செயலமர்வு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில்இ இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில் இந்த விசேட இணையவழி விழிப்புணர்வு செயலமர்வுத் தொடர் இன்று (9) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
ஓய்வுக்கால வாழ்க்கை
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள அதிகாரிகளுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்வதற்கும், உரிய காலத்தில் ஓய்வூதியப் பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான வழிகாட்டல்கள் இந்த அமர்வுகளில் வழங்கப்படும்.
ஒவ்வொரு அரச அதிகாரியும் தாமதமின்றி ஓய்வூதியத்தைப் பெறுவது அவர்களின் உரிமையாகும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெறும் அதிகாரிகள் தமது ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித சிரமங்களுமின்றித் தொடங்குவதற்கு இந்த முயற்சி பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |