முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இரு இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (08-07-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்துக் பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
குற்றச்சாட்டுக்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த காணொளியில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
சம்பவத்தின் போது காவல்துறையினர் மதுபோதையில் குறித்த இளைஞர்களை தாக்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் தாக்குதல்
இதன்போது காலால் உதைத்து விழுத்தி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படுகாயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

இருப்பினும் இதுவரை காவல்துறையில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர்களின் வாகனங்களை வழிமறித்த போது அவர்கள் நிறுத்தாமையினாலேயே இவ்வாறு காவல்துறையினர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |