தமிழர் பகுதிகளில் விகாரைகளை புகுத்துவது சட்டவிரோதம் : இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு
Sri Lankan Tamils
Suren Raghavan
Buddhism
By Vanan
தமிழர் பகுதிகளில் புகுத்தப்படுகின்ற பௌத்த பண்பாட்டு அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டவிரோதமான செயல்
தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளை புகுத்துவது சட்டவிரோதமான செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற பௌத்த பண்பாட்டு சின்னங்கள் தமிழ் மக்களின் உரிமைகளாகும்.
ஆனால் தற்போது புகுத்தப்படுகின்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.