சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Anura Kumara Dissanayaka May Day National People's Power - NPP NPP Government
By Thulsi May 01, 2026 02:42 AM GMT
Report

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

யாழில் சீட்டுப் பண விவகாரத்தில் பயங்கரம்: குடும்பஸ்தர் மீது கொடூரத் தாக்குதல்

அதிகூடிய அரச வருமானம்

அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' புயல், மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும், எமது நாட்டின் தனித்துவமான மனிதாபிமானமிக்க அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி | Pension Arrears Money For Govt Pensioners

டித்வா' போன்ற இயற்கை அனர்த்தங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, 2025 ஆம் ஆண்டில் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிகக்குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைப் பதிவு செய்தமை

2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் அதிகூடிய அரச வருமானத்தைப் பெற்றமை, முதன்மைக் கணக்கில் மேலதிக இருப்பைப் பேணியமை, பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி வருமானம் 17 பில்லியன் டொலர்களைத் தாண்டியமை, இலங்கை வரலாற்றில் அரச வருமான இலக்குகளை விஞ்சிய ஒரே ஆண்டு மற்றும் அதிகூடிய வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தைப் பெற்றமை உட்பட நாட்டின் முக்கிய பொருளாதாரக் காரணிகளில் பல குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாம் பதிவு செய்துள்ளோம்.

இத்தகைய தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், உழைக்கும் மக்களின் உழைப்பின் மதிப்பைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப அரச கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

அடிப்படைச் சம்பளம்

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல்.

அத்துடன் 2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியில் இணைந்த அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உரிமையை வழங்குதல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்தல், பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபடுவது தொடர்பான சட்டத் திருத்தங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்விக்காக 'மஹபொல' புலமைப்பரிசில் கொடுப்பனவை 10,000 ரூபாவால் அதிகரித்தல் உட்பட இந்நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மட்டுமன்றி உற்பத்தியாளர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான பல சலுகைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்துகிறேன்.

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி | Pension Arrears Money For Govt Pensioners

கடந்த 'டித்வா' புயலின் போது இந்நாட்டின் உழைக்கும் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டனர். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கியமை, வரலாற்றில் அனர்த்தமொன்றின் போது வழங்கப்பட்ட அதிகூடிய இழப்பீட்டுத் தொகையை வழங்கியமை, வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தியமை ஊடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னரை விட உயர்நிலைக்குக் கொண்டு செல்லும் 'Rebuilding Sri Lanka' திட்டத்தை நாம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம் என்பதை நினைவு கூறுகிறோம்.

இந்நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் துயரங்கள் மற்றும் கண்ணீருக்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான பொருளாதாரத்தையும் பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதே எமது ஒரே நோக்கமாகும்.

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது

யாழில் தவறாக சித்தரிக்கப்பட்ட 16 ஆசிரியைகளின் குழுப் புகைப்படம்: 5 மாணவர்கள் கைது

பொருளாதாரம் மற்றும் உற்பத்தி 

இதற்காக நாளுக்கு நாள் நவீனமடையும் உற்பத்தி சக்திகள் மற்றும் வளர்ந்து வரும் சூழலுக்கு ஏற்ப மனித வளம், பொருளாதாரம் மற்றும் உற்பத்தி தொடர்புகளை மேம்படுத்துவதை முதன்மைப் பணியாக நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம், 'Clean Sri Lanka' திட்டம், 'சமூக சக்தி' திட்டம் போன்றவை இதற்காகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி | Pension Arrears Money For Govt Pensioners

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு தோல்வியுறாத பயணத்திற்காக நாம் பணியாற்றிக் கொண்டே கற்றுக்கொண்டும் கற்றுக்கொண்டே பணியாற்றியும் வருறோம்.

நிச்சயமாக ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு அன்பான உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  

தையிட்டி விவகாரத்தில் அரசுக்கு விலை போன வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்...! கஜேந்திரகுமார் பகிரங்கம்

தையிட்டி விவகாரத்தில் அரசுக்கு விலை போன வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர்...! கஜேந்திரகுமார் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024