அச்சத்தை ஏற்படுத்தி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி -அமைச்சரின் நாடகம் அம்பலம்
Power cut Sri Lanka
Public Utilities Commission of Sri Lanka
Kanchana Wijesekera
By Sumithiran
நஷ்டம் அடைவதாகக் கூறுவதால் இலங்கை மின்சார சபை தனது ஊழியர்கள் எவருக்கும் இந்த ஆண்டு பணிக்கொடையை வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பணிக்கொடையை வழங்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒருபோதும் அனுமதி கிடையாது

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தமது ஆணைக்குழு இணங்கவில்லை என தெரிவித்த அவர், ஆணைக்குழு நல்ல நிலையில் இருக்கும் வரை எந்த தரப்பினரும் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் நாடகம் அம்பலம்

ஏழெட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி