வெளிநாடுகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள்...! வெளியான தகவல்
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது 1.7 மில்லியனுக்கும் (17 இலட்சம்) அதிகமான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08-07-2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள்
மேலும் தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடும் இலங்கைத் தொழிலாளர்கள் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கிய பங்களிப்பிற்கு ஹேமச்சந்திர தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 YOU MAY LIKE THIS...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |