ஒக்ஸிசனால் உயிர்வாழும் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
மருத்துவமனைகளில் ஒக்ஸிசனை நம்பியுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலைமை கவனிக்கக் கூடியதாக இருக்கின்றதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸின் விகாரமான டெல்டா வேகமாக பரவுவதன் விளைவாக இது இருக்கலாம் என்றும், இதை நிவர்த்தி செய்ய அதிக கவனம் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த காலத்தில் 100 நோயாளிகளில் 5 பேர் ஒக்ஸிசனை சார்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது, எனினும் இப்போது பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒக்ஸிசனை நம்பி உள்ளனர்.
இதற்கிடையில், தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசியின் முக்கிய நம்பிக்கை மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதே என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.