யாழில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய புலனாய்வுத் துறை : கடுமையாக சாடும் வேலன் சுவாமிகள்
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இன அழிப்பு விடயத்திலே அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர் என வேலன் சுவாமிகள் கடுமையாக சாடியுள்ளார்.
யாழ். - நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் இன்றைய தினம் (04) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் எங்கள் உரிமைக்காக இன்று முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் என அனைவரும் எங்களை சுற்றி நின்று அச்சுறுத்தி கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு, புகைப்படங்களையும் அவர்கள் எடுக்க முற்படுகின்றனர், இவ்வாறு இலங்கை அரசின் அடாவடிக்கும் மற்றும் அச்சுருத்தலுக்கும் இடையில் இன்றைய போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |