இந்திய சீன அரசுகளுடன் சிறிலங்கா மேற்கொள்ளும் ஒப்பந்தங்களின் பின்னணி என்ன?
இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பின்னணியில் வேறு எந்த காரணியும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ சீனாவுடன் எந்தவொரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் கையெழுத்திடவில்லை. உலகில் எந்த நாடும் எமக்கும் எதிரிகள் அல்ல. அனைத்துமே எமது நட்பு நாடுகளாகும். சீனாவுடனும் இந்தியாவுடனும் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள இணக்கப்பாட்டினை எட்டியுள்ளோம்.
இந்தியாவும் அண்மையில் 1 பில்லியன் வேலைத்திட்டத்திற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இதே போன்று தான் சீனாவும் பணப்பறிமாற்றலுக்காக இணக்கம் தெரிவித்துள்ளது.
எனவே காலத்துக்கு தேவையான ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளன. இதனைத் தவிர வேறு எந்த காரணமும் இதன் பின்னணியில் இல்லை” என்றார்.