சிலாபத்தில் கரையொதுங்கிய படகு: கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை
இந்தியாவுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (15.08.2026) அதிகாலை சிலாபம் - இரணைவில கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு கடற்கரையை அண்மித்த பகுதியில் பாறைகளில் மோதாமல் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
படகில் பயணித்தவர்கள் அல்லது வேறு நபர்கள் அதிலிருந்து இறங்கி கரையை அடைந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
கரையொதுங்கிய இந்திய படகு
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த படகை பாதுகாப்பிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

படகின் உரிமை, அது எந்தப் பகுதியில் இருந்து வந்தது, அதில் பயணித்தவர்கள் யார், எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் வந்து கரை ஒதுங்கியது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், படகில் ஏதேனும் பொருட்கள் உள்ளனவா, அதில் பயணித்தவர்கள் தொடர்பான தடயங்கள் காணப்படுகின்றனவா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 21 மணி நேரம் முன்