காணாமல் போன இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நேர்ந்த கதி...!
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார்.
மாணவரின் சடலம்
இந்த நிலையில், கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து, இந்திய மாணவர் ஒருவர் மாயமான முறைப்பாடு வந்ததைத் தொடர்ந்து, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கச் சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், காணாமல்போன மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தீவிர விசாரணை
அவர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாணவர் மரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, மாணவர் சடலம் மீட்கப்பட்டது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில் மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், இறந்த மாணவரின் உடலைத் தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளதாகத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 5 மணி நேரம் முன்