இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று (15) நாட்டை வந்தடைந்தது.
ஆசியான் பிளஸ் கேடட் செயில் (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையின் கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளும் இக்கப்பலுடன் வந்துள்ளனர்.
கடற்படை மரபுகளின்படி, கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் இக்கப்பல் வரவேற்கப்பட்டது.
ஏற்பாடு
நாட்டை வந்தடைந்த KRI BIMA SUCI - 945 என்ற பாய்மரக் கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி சுகெங் ஹரியந்தோ என்பவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் கப்பல் தங்கியிருக்கும் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கடற்படைப் பணியாளர்கள் மற்றும் கடற்படைப் பயிற்சியாளர்கள் பங்கேற்கவும், நாட்டில் உள்ள பல முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |