யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Aug 05, 2024 07:44 AM GMT
Report

குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடித்ததால் குழந்தையின் கைகால்களை திருகியதாக யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்து 45 நாளான குழந்தையானது தாய் பால் ஊட்டிய சில மணி நேரங்களுக்கு பின்னர் மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் : மின்னல் வேக பெண்ணால் சிறிய தீவிற்கு கிடைத்த தங்கப் பதக்கம்

மரண விசாரணை

குழந்தையின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில் மரண விசாரணையை வலிகாமம் கிழக்கு பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம் | Inquest Into The Death Of Boy Baby Died In Jaffna

குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் தளும்புகள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

குழந்தையின் கை கால் முறிக்கப்பட்டிருந்த நிலையில் தலையில் தாக்கப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி

உயிரிழந்த சம்பவம் 

இந்நிலையில், குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் தெல்லிப்பழை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த வசாரணையின் போது குழந்தை பால் குடிக்க மறுப்பதால் கைகள் கால்களை திருகினேன் ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தயார் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த குழந்தை : தாய் அளித்துள்ள வாக்குமூலம் | Inquest Into The Death Of Boy Baby Died In Jaffna

அத்தோடு, குழந்தையின் தந்தையையும்  மற்றும் குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் , குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்  நீதிமன்ற உத்தரவின் பேரில் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை...! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை...! 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்