குஜராத் டைட்டன்ஸ் அணி சென்ற பேருந்தில் தீ - வீதியில் தவித்த வீரர்கள்
குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த பேருந்தில் அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்கசிவால் பேருந்தில் தீ பிடித்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது
ஊழியர்கள் உடனடியாக அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இரசிகர்களிடையே அதிர்ச்சி
இந்தச் சம்பவத்தால் வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைத் தவறவிட்ட சோகத்தில் இருந்த குஜராத் இந்தச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் தனது சமூக வலைதள பதிவில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுடன் சாலையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சோகத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ஐபிஎல் அணி வீரர்கள் சென்ற பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் இரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |